PHPWord

 

 

 

رَسُولُ الإِسْلَامِ مُحَمَّدٌ ﷺ

 

இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்

 

 

 

اللَّجْنَةُ العِلْمِيَّةُ

بِرِئَاسَةِ الشُّؤُونِ الدِّينِيَّةِ بِالمَسْجِدِ الحَرَامِ وَالمَسْجِدِ النَّبَوِيِّ

 

 

மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மத விவகாரங்களுக்கான தலைமைத்துவத்தின் அறிவியல் குழு

بِسْمِ اللهِ الرَّحمَنِ الرَّحِيمِ

ஸ்லாத்தின் தூதர் முஹம்மத்த (ஸல்) அவர்கள்

மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதீனாப் பள்ளிவாயிலின் மார்க்க விவகாரங்களின் தலைமையகத்தில் உள்ள கல்விக் குழு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் இதில் இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர், பரம்பரை, பிறந்த நகர், திருமணம், இறைத்தூதுத்துவம், அவர்கள் அழைத்த விடயங்கள், நபித்துவத்திற்கான அத்தாட்சிகள், அவர்களின் ஷரீஆ சட்டதிட்டங்கள் போன்ற விடயங்களுடன் அவர்களின் எதிரிகளின் நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தியிருக்கிறேன்

1-அவரின் பெயர்,பரம்பரை, பிறந்து வளர்ந்த நகர்

இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் அவர்கள் அப்துல்லாஹ்வின் மகனாவார்,அப்துல்லாஹ் அப்துல் முத்தலிபின் மகனவார்,அப்துல் முத்தலிப் ஹாஷிமின் மகனாவார்.ஹாஷிம் அவர்கள் இப்ராஹீம் நபியின் மகனான இஸ்மாயில் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்தவராவார்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷாமிலிருந்து மக்காவிற்கு வந்தார்கள். அவர்களுடன் அவர்களது மனைவியான ஹாஜரும், தொட்டில் பருவத்திலிருந்த அவர்களின் மகன் இஸ்மாயீலும் இருந்தனர். அல்லாஹ்வின் கட்டளைப்பிரகாரம் அவர்கள் இருவரையும்; மக்காவில் குடியமர்த்தினார்கள்.சிறுவன் இஸ்மாயீல் அவர்கள் வாலிபவயதை அடைந்த போது இப்ராஹீம் (அலை) அவர்கள் மீண்டும் மக்கா வந்து புனித கஃபா ஆலயத்தை தனது மகனுடன் சேர்ந்து கட்டினார்கள்;. அன்றிலிருந்து கஃபாவை சூழ மக்கள் பெருகியதோடு,ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக ஆர்வத்துடன் வருபவர்களினதும்,இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மதத்தை ஒற்றி அல்லாஹ்வை வணங்குவோரினதும் இடமாக மக்கா மாறியது.

அதன் பின்னர் அம்மக்கள் ஓரிறைக்கொள்கையிலுருந்து நெறிபிரழ்ந்து தவறான வழியில் செல்லும் நிலை ஏற்பட்டது.இதனால் அரபுத் தீபகற்பத்தின் நிலை அதனை சூழ உள்ள உலகின் ஏனைய பிரதேசங்களின் நிலைக்கு மாறியது அதாவது விக்கிரகங்களை வணங்குதல், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல் பெண்களுக்கு அநியாயம் செய்தல் அபாண்டம் சும்த்துதல், மது அருந்துதல், விபச்சாரம் போன்ற மானக்கேடான விடயங்களை புரிதல், அனாதைகளின் சொத்துக்களை உண்ணுதல், வட்டித் தொழிலில் போன்ற விடயங்களில் ஈடுபடுபவர்களாக மாறினர்

இவ்வாறானஅஞ்ஞான செயற்பாடுகள் நிறைந்த இடத்திலும் சூழலிலும் தான் இஸ்லாத்தின் தூதர்அவர்கள் 571ம் வருடம் இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியில் அப்துல்லாஹ் என்பவருக்கு மகனாகமுஹம்மத் அவர்கள்பிறந்தார்கள் பிறக்க முன்னரே அவர்களின தந்தையும் இறந்திருந்தார் அவர்களின் ஆறாம்வயதில் தாயும் இறந்தார் அதன் பின் அவர்களின் சிறிய தந்தையான அபூதாலிப் அவர்களைப் பொறுப்பேற்றார் மொத்தத்தில் அவர்கள் தமது சொந்த உழைப்பில் சம்பாதித்து சாப்பிடும் ஒர் ஏழை அநாதையாக வாழ்ந்தார்கள்

ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணுடன் நபியின் மங்கலத் திருமனம்

நபி (ஸல்) அவர்க ள் தனது 25 வது வயதில் மக்காவில் வாழ்ந்த பெண்களில் தலை சிறந்த கதீஜா அன்னையாரை மணம் முடித்தார்கள். அனனாரின் மூலம் நான்கு பெண்குழந்தைகளும்,இரண்டு ஆண் குழந்தைகளும் கிடைத்தன அவரின் ஆண் குழந்தைகள் யாவரும் சிறு வயதிலேயே மரணித்து விட்டனர்.

நபியவர்கள் தனது மனைவியுடனும்,குடும்பத்துடனும் மிகவும் அன்பாகவும்,பாசமாகவும் நடந்து கொண்டார்கள்.இதனால் அவர்களின் மனைவி மிகவும் அவர்களை நேசித்தார்கள் தமது மனைவி மரணித்து பல வருடங்கள் கழிந்த பின்னரும் அவர்களின் அன்பை நபியவர்கள் மறவாது பாதுகாக்கவும் அவரை கௌரவப்படுத்தவும் ஆட்டை அறுத்து கதீஜா (ரழி) அவர்களின் தோழிகளுக்கு பகிர்ந்தளிப்பவர்களாக இருந்தார்கள்

 

வஹியின் துவக்கம்

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சிறுவயது முதல் மகத்தான நல்லொழுக்கமுடையவர்களாக இருந்தார்கள் அவர்களின் சமூகம் அவர்களை உண்மை பேசும் நம்பிக்கையாளர் என்ற சிறப்புப் பெயரால் அழைத்தது.அவர்கள் தமது சமூகத்தாருடன் உன்னதமான செயற்பாடுகளில் கலந்து கொள்பவர்களாகவும்.விக்கிர ஆராதனையோடு சம்பந்தப்பட்ட விடயங்களை வெறுக்கக்கூடியவர்களாகவும் அவ்விடயங்களில் அவர்களுடன சேராது ஒதுங்கியும் இருந்தார்கள்

நபியவர்கள் தனது நாற்பதாம் வயதை அடைந்து மக்காவில் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தூதராக தெரிவு செய்தான் அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல் குர்ஆனில் இறங்கிய ஆரம்ப (வசனங்களாகிய இக்ரஃ என ஆரம்பிக்கும்) வசனங்களுடன் அவர்களிடம் வந்தார் அவ்வசனங்களாவன

﴿اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ 1 خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ 2 اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ3 الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ 4 عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ 5

"படைத்த உமதிரட்சகனின் பெயரால் ஓதுவீராக"

அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.

ஓதுவீராக! உனது இரட்டசகன் மிக கண்ணியமானவன்

அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்

(அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை அவன் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.

(ஸூறத்துல் அலக் 1-5)

இந்நிகழ்வினால் இதயம் படபடத்தவராக தனது மனைவியிடம் வந்து இச்செய்தியை கூறவே மனைவி அவர்களை அமைதிப்படுத்திவிட்டு நபியவர்களை அவரின் சிறிய தந்தை வரகா இப்னு நவ்பல் அவர்களிடம் அழைத்துச் சென்றார். வரகா அவர்கள் கிரிஸ்துவராக மதம்மாறி தவ்ராத் இன்ஜீல் வேதங்களை நன்கு கற்றறிந்த ஒருவராக இருந்தார். உடனே கதீஜா அவர்கள் தனது சிறிய தந்தையை நோக்கி சிறிய தந்தையே உனது சகோதரனின் மகன் சொல்வதை கேட்பிராக என்று கூற எனது சகோதரனின் மகனே நீர் எதனைக் கண்டீர் என்று நபியவர்களிடம் வரகா கேட்டார் உடனே நபியவர்கள் தாம் கண்ட செய்திகளை அவரிடம் கூறினார்கள்

அதை (கேட்டதும்) வரகா உங்களிடம் வந்த இவர்தான் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய'நாமூஸ'ஜிப்ரீல் ஆவார் என்று கூறிவிட்டு உம்மை உமது சமூகம் இவ்வூரை விட்டு வெளியேற்றும் போது நான் ஒரு திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! நான் உயிருடன் இருந்திருக்க வேண்டுமே! என அங்கலாய்த்து கூற நபியவர்கள் இவர்கள் என்னை இவ்வூரை விட்டு வெளியேற்றி விடுவார்களா? என வரகாவிடம் கேட்டதற்கு அவர் ஆம் எனக் கூறிவிட்டு நீங்கள் கொண்டுவந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் மக்களால் பகைத்துக்கொள்ளப்படாமல் இருந்ததில்லை. நீர் வெளியேற்றப்படும் அந்நாளை நான் அடைந்து கொண்டால் உமக்கு பக்கபலமாக இருந்து உதவிசெய்வேன் என்று கூறினார்

நபியவர்கள் மீது மக்காவில் அல்குர்ஆன் தொடராக இறங்கியது ஜிப்ரீல் (அலை) அவர்கள் அனைத்துலக இரட்சகனிடமிருந்து தூதுத்துவம் தொடர்பான விபரங்களை கொண்டுவருவது போன்று அல் குர்ஆனையும் அவர்களிடம் ஒப்படைத்தார்.

நபியவர்கள் தமது சமூகத்தாரை இஸ்லாத்தின்பால் தொடர்ந்தும் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அழைப்பை அச்சமூகம் ஏற்கமறுத்து அவர்களுடன் முரண்பட்டு நடந்து கொண்டது. இதனால் அச்சமூகத்தார் நபியவர்களிடம் தமது தூதுச்செய்தியை எத்திவைப்பதை விட்டுவிடவேண்டும் என்றும் அதற்குப் பதிலாக செல்வத்தையும் அதிகாரத்தையும் வழங்குவதாகவும் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்கள். அவை அனைத்தையும் நபியவர்கள் ஏற்காது முழுமையாக மறுத்துவிட்டார்கள் அது மாத்திரமின்றி இதற்கு முன்னிருந்த இறைத்தூதர்களுக்கு அவர்களின் சமூகத் தலைவர்கள் சூனியக்காரன், பொய்யன், கற்பனைக் கதை கூறுபவர் என்று கூறியது போன்று நபியவர்களுக்கும் கூறி அவர்களை உளரீதியான சிரமத்திற்குள்ளாக்கியதோடு உடல் ரீதியாகவும் காயப்படுத்தி அவர்களைப் பின்பற்றியோரையும் நெருக்குதல்களுக்குஉள்ளாக்கினார்கள்.

நபிஸல்அவர்கள்மக்காவில் மக்களைஅல்லாஹ்வின்பால் அழைக்கும்பிரச்சாரப்பணியைதொடர்ந்தும் முன்னெடுத்தார்கள். இதற்காக ஹஜ் பருவகாலத்தையும், அரபுகளின் பருவகால சந்தைகளையும் பயன்படுத்திபடுத்தியதோடு இப்பகுதிகளுக்குச்சென்று மக்களை சந்தித்து இஸ்லாத்தை அவர்களுக்கு பிரச்சாரம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் அதுமாத்திரமின்றி இத்தூதை அம்மக்கள் ஏற்று நடந்தால் அவர்களுக்கு உலகியல் இன்பங்களும் பதவியும் தலைமைத்துவ அதிகாரமும் கிடைக்குமென ஆசைகாட்டவில்லை, வாள் கொண்டு அவர்களை மிரட்டவுமில்லை. ஏனெனில் அவர்கள் அரசராகவோ அதிகாரம் படைத்தவராகவோ இருக்கவில்லை. அவர்களின் பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்தில் தாம் கொண்டுவந்த மகத்தான குர்ஆனைப்போன்ற ஒன்றை கொண்டுவருமாறு பகிரங்கமாக சவால் விட்டார்கள் அச்சவாலை தொடர்ந்தும் தமது எதிரிகளுக்கு முன்வைத்தார்கள். இதனை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. இப்பிரச்சாரத்தின் உண்மையை விளங்கிய அவர்களில் பலர் இஸ்லாத்தை ஏற்று நபித்தோழர்களாக மாறிவிட்டார்கள். அல்லாஹ்அவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக

அல்லாஹ் நபியவர்களை மக்கா வாழ்ககையில் மிகப்பெரும் அற்புதமான இஸ்ராஉ மிஃரஜ் எனும் பயணத்தின் மூலம் கண்ணியப்படுத்தினான். அதாவது அவர்களை பலஸ்தீனில் அமைந்துள்ள பைத்துல் மக்திஸுக்கு இரவில் அழைத்துச் சென்று அதன் பின் அங்கிருந்து விண்ணுக்கு அழைத்து சென்ற நிகழ்வாகும். இது போன்று நபி இல்யாஸ் மற்றும் ஈஸா அலைஹிமஸ்ஸலாம் இருவரும் வானுலகத்திற்கு உயர்த்தப்பட்ட செய்தி பிரபலமானதும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் தெரிந்த விடயமுமாகும்.

விண்ணுலகப் பயணத்தின் போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து தற்போது முஸ்லிம்கள் நிறைவேற்றும் ஐவேளைத் தொழுகைக்கான கட்டளையைப்பெற்றுக்கொண்டார்கள். அத்துடன் மக்காவில் இதுபோன்ற வேறு ஒரு அற்புதமும் நிகழ்ந்தது. அதுதான் சந்திரன் பிழந்த நிகழ்வு. அதனை இணைவைப்பாளர்களும் நேரடியாகக் கண்டார்கள்.

நபியவர்களுக்கு சூழ்ச்சி செய்து அவர்களை இஸ்லாமிய பிரச்சாரப்பணியிலிருந்து அந்நியப்படுத்துவதனை நோக்காக கொண்டு அவர்களின் பிரச்சாரத்தை தடுப்பதற்கான அனைத்து வகையான உபாயங்களையும் குறைஷிக் காபிர்கள் கையாண்டனர்.இறையத்தாட்சிகளை நபியவர்களிடம் வேண்டுவதில் பிடிவாதமாக நடந்து கொண்டதுடன் மக்களை நபியவர்களிடம் செல்ல விடாது தடுப்பதற்காகவும் அவர்களுடன் தர்க்கம் செய்வதற்கு போதிய ஆதாரங்களை பெற்றுக்கொள்ளவும் யூதர்களின் உதவியை நாடினார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிராக குறைஷிக்காபிர்களின் துன்புறுத்தல்கள் தொடர்ந்த போது அபிஸீனியா(எதியோப்பியா)விற்கு ஹிஜ்ரத் செய்வதற்கான அனுமதியை நபியவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கி விட்டு அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள் அந்நாட்டில் எவருக்கும் அநீதி இழைக்காத நேர்மையான அரசன் உள்ளான் அவன் ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்றார்கள் எனவே அவர்களில் இரு குழுக்கள் ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டனர் அவர்கள் அங்கே சென்றதும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தை பற்றி அம்மன்னனிடம் கூறவே அவர் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார் பின்னர் அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக இம்மார்க்கத்தைத்தான் மூஸாவும் கொண்டுவந்தார் இம்மார்க்கமானது ஒரே ஒளிவிளக்கிலிருந்து வெளிப்படுகிறது என்றும் கூறினார்.தொடர்ந்தும் நபியவர்களுக்கும் அவரை ஏற்றுக்கொண்ட தோழர்களுக்கும் அச்சமூகத்தின் தொல்லைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன

இப்பருவகால பிரச்சாரத்தின் போது மதீனாவிலிருந்து வந்த சில நபர்கள் நபியவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றதுடன் யத்ரிப் என்றழைக்கப்படும் மதீனா நகரத்திற்கு நபியவர்கள் வந்தால் அவர்களுக்கு உதவி செய்வதாகவும் சத்தியப்பிரமானம் செய்தார்கள். இதனால் மக்காவில் எஞ்சியிருந்த முஸ்லிம்களை மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு நபியவர்கள் அனுமதி வழங்கினார்கள். இவ்வனுமதியை பெற்ற முஸ்லிம்ங்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தனர்.அங்கே இஸ்லாம் நுழையாத எந்த வீட்டையும் காண முடியாத அளவிற்கு மதீனா முழுதும் இஸ்லாம் பரவியது.

நபியவர்கள் மக்காவில் 13 வருட காலமாக மக்களை ஏகத்துவத்தின் பால் அழைக்கும் பணியை மேற்கொண்டதன் பின்னர் அவர்களுக்கு அல்லாஹ் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யுமாறு அனுமதி வழங்கினான் இவ்வனுமதியை ஏற்று நபியவர்கள் அங்கே ஹிஜ்ரத் செய்து இஸ்லாமியப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள் இக்காலப்பகுதியில் இறைச்சட்டங்கள் சிறிது சிறிதாக தொடர்ந்தும் இறங்கின, கோத்திரத்தலைவர்களுக்கும் அரசர்ககளுக்கும் இஸ்லாத்தின் தூதை எத்திவைப்பதற்காக கடிதங்களை தூதுவர்கள் மூலமாக அனுப்பி வைத்தார்கள் அவ்வாறு நபியவர்களால் கடித மூலம் இஸ்லாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்களுள் ரோம் பாரசீக எகிப்திய மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்

ஒரு முறை மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதனைக் கண்டு மக்கள் திடுக்கிட்டனர். இதே நாளில்தான் நபியவர்களின் மகனான இப்ராஹீமின் மரணமும் நிகழ்ந்திருந்தது. மக்கள் இப்ராஹீமின் மரணித்திற்காக கிரகணம் ஏற்பட்டிருக்கிறது எனப் பேசிக்கொண்டனர். இதனைக் செவியுற்ற நபியவர்கள்

(إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَكْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا مِنْ آيَاتِ اللهِ يُخَوِّفُ اللهُ بِهِمَا عِبَادَهُ).

"நிச்சயமாக சூரியனும் சந்திரனும் ஒருவரின் பிறப்பிற்காகவோ இறப்பிற்காகவோ மறைவதில்லை, அவைகள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும் இதன் மூலமாக தனது அடியார்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறான்" என்று கூறினார்கள்1.

நபியவர்கள் ஒரு பொய்யராக தம்மிடம் இல்லாத ஒன்றைக் கொண்டு பெருமைபேசுபவராக இருந்திருந்தால், இந்நிகழ்வைப் பயன்படுத்தி மக்களுக்கு தமது பொய்யின் மூலமே அச்சத்தை ஏற்படுத்தி தனது மகனின் மரணத்திற்காகவே கிரகணம் ஏற்பட்டது என்று கூறிவிட்டு என்னைப் பொய்ப்பிப்போரின் நிலை எவ்வாறு இருக்கும் என்று அவர்களிடம் கேட்டிருப்பார்கள்.

இறைத்தூதர் (ஸல்) (அலை) அவர்களை தனது இரட்சகன் நிறைவான நட்குணங்களினால் அழகு படுத்தியுள்ளான். அவர்களை பின்வருமாறு அல்லாஹ் வர்ணித்துள்ளான்:

﴿وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ 4

"நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்".

(ஸூறதுல் கலம் 4)

ஆகவே அவர்கள் உண்மை பேசுதல் உளத்தூய்மை வீரம் நேர்மை தமது எதிரியாயினும் வாக்கை நிறைவேற்றும் குணம் தயாளத்தன்மை போன்ற அனைத்து நற்குணங்களையும் பெற்றவராக இருந்தார்கள். அது மாத்திரமின்றி ஏழை எளியவர்களுக்கும் விதவைகளுக்கும் தேவையுடையவர்களுக்கும் தர்மம் செய்வதை மிகவும் விரும்புபவர்களாகவும், அவர்களுக்கு நேர்வழி கிடைக்கவேண்டும் என்பதில் பேராவல் உடையவர்களாகவும் அவர்களுடன் அன்பாகவும் பணிவுடனும் நடந்து கொள்பவர்களாகவும் காணப்பட்டார்கள். நபியவர்ளைக் சந்திப்பதற்காக வெளியூரிலிருந்து வரக்கூடியவர் அவர்களின் தோழர்களிடத்தில் உங்களில் முஹம்மத் என்பவர் யார்? என்று விசாரிக்கும் அளவுக்கு நபியவர்கள் தம்மை வித்தியாசப்படுத்திக் கொள்ளாது தோழர்களுடன் கலந்து இருந்தமை அவர்களின் பணிவுக்கான எடுத்துக்காட்டாகும்.

அவர்களின் வாழ்க்கை வரலாறானது முழுமைத்துவத்தினது அடையாளமாகக் கருதப்படுகிறது. அதே போன்று அவர்கள் மற்றவர் அனைவருடனும் சிறந்த முறையில் நடந்து கொண்டதானது உயர் பண்பாட்டின் குறியீடாகவும் உள்ளது. அதாவது நபியவர்கள் தமது நண்பர், எதிரி ,உறவினர், உறவினர் அல்லாதோர், சிறியோர் பெரியோர், ஆண் பெண் போன்றோரிடமும், மிருகம் பறவை போன்ற உயிரினங்களிடத்திலும் அவற்றுக்குரிய உரிமைகளை வழங்கி உயர் பண்பாட்டைப் பேணி நடந்து கொண்டார்கள்.

மார்க்கத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கி முழுமைப்படுத்திய பொழுது நபியவர்கள் அதனை மிகச சிறந்த முறையில் எத்திவைத்தார்கள். இறுதியாக நபியவர்கள் தமது 63 வயதில் மரணித்தார்கள். நுபுவ்வத்திற்கு முன் 40 வருடங்கள் சாதாரன ஒரு மனிதராகவும் எஞ்சிய 23 வருடங்கள் ஒரு நபியாகவும், ரஸூலாகவும் இருந்துள்ளர்கள்.

நபியவர்கள் மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் போது வழிப்போக்கருக்கு தர்மமாக வழங்கிய ஒரு துண்டு நிலத்தையும் அவர்கள் பயணம் செய்வதற்ககு பயன்படுத்திய வெள்ளைக் கோவேரு கழுதையையும் தவிர எந்த ஒருசெல்வத்தையோ அநந்தரச் சொத்துக்களையோ விட்டுச் செல்லவில்லை2.

இஸ்லாத்தை ஏற்று அவர்களை நம்பி பின்பற்றியோரின் எண்ணிக்கை மிக அதிகமாகும். அவர்களின் தோழர்களில் அவர்களுடன் ஹஜ்ஜதுல் வதா இறுதி ஹஜ்ஜில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் கடமையை நிறைவேற்றினர். இது நபியவர்களின் மரணத்திற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன் இடம்பெற்றது. நபியவர்கள் தமது தோழர்களை இஸ்லாமிய கோட்பாடுகள் மற்றும் உயர் விழுமியங்கள் மீது பயிற்றுவித்ததனால் அவர்களிடத்தில் நீதி, எளிமையான வாழ்வு, பேணுதல், வாக்கை நிறைவேற்றுதல், அவர்கள் விசுவாசித்து ஏற்றுக் கொண்ட இம்மார்க்கத்திற்கு எதனையும் அர்ப்பணிக்கும் பண்புகள் வளரக் காரணமாக அமைந்தது. இப்பண்புகளே அவர்களை உத்தமர்களாக மாற்றியது ஒரு வேளை இதுவே இம்மார்க்கம் பாதுகாக்கப்படுவதற்கும் பரவுவதற்குமான இரகசியங்களில் ஒன்றாக இருக்க முடியும்.

அவர்களின் தோழர்களில் இறைவிசுவாசத்தாலும் அறிவாலும் செயலாலும் தூய்மையாலும் அர்ப்பணிப்பாலும் வீரத்தாலும் தயாளத்தன்மையாலும் உயர் நிலையில் இருப்போரில் அபூபக்கர் அஸ்ஸித்தீக், உமருப்னுல் கத்தாப், உஸ்மானுப்னு அப்பான், அலிய்யுப்னு அபீ தாலிப் குறிப்பிடத்தக்கவர்கள். (ரழியல்லாஹு அன்ஹூம்) அவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. இவர்களே நபியவர்களை நம்பி ஏற்றுக்கொண்டோரில் முதன்மையானவர்களாகவும் நபியவர்களுக்குப் பின் கலீபாக்காளாக தெரிவு செய்யப்பட்டு இந்த மார்க்கத்தின் கொடியைச் சுமந்து சென்றோர்களாகவும் திகழ்கின்றார்கள். என்றாலும் அவர்களுக்கென்று நபித்துவம்சார்ந்த எந்தவித தனிச்சிறப்புகளும் இருக்கவில்லை. ஏனைய ஸஹாபாக்களைவிடவும் பிரத்தியேகமான சிறப்பு எதனையும் நபியவர்கள் வழங்கவுமில்லை.

நபியவர்கள் கொண்டுவந்த வேதம் மற்றும் வழிமுறைகளையும் மேலும் அவர்களின் வாழ்கை சரிதையையும் அவர்களின் சொல் செயல்கள் யாவற்றையும் அவர்கள் பேசிய மொழியில் அல்லாஹ் பாதுகாத்தான் நபியவர்களின் வாழ்க்கை வரலாறு பாதுகாக்கப்பட்டது போல் எந்த வாழ்க்கை வரலாறும் வரலாறு நெடுகிலும் பாதுகாக்கப்டவில்லை எந்தளவிற்கெனில் அவர்கள் எவ்வாறு தூங்கினார்கள்? எவ்வாறு சாப்பிட்டார்கள்? எவ்வாறு பருகினார்கள்? எவ்வாறு சிரித்தார்கள்? போன்றவைகூட பாதுகாக்கப்பட்டன

தமது குடும்பத்தினருடன் வீட்டினுல் எவ்வாறு நடந்து கொண்டார்கள்போன்றவைகூட பாதுகாக்கப்பட்டன

அவர்களின் வாழ்வின் எல்லாக் கட்டங்களும் பாதுகாக்கப்பட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது அவர்கள் ஒரு மனிதரும் தூதருமாவர்கள் அவர்களுக்கென்று இறைவனின் (ருபூபிய்யத்)சார்ந்த சிறப்புப் பண்புகள் எதுவுமில்லை தமக்கென நன்மைபயக்கக் கூடியவற்றை செய்யவோ அல்லது தீங்கிளைக்கூடிய எவ்வித செயலையும் செய்வதற்கான அதிகாரத்தையும் பெறவுமில்லை

4-அவர்களின் தூதுத்துவம்

இப்பூவுலகெங்கும் இணைவைப்பும் இறைநிராகரிப்பும் அறியாமைiயும் பரவியிருந்த போது முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்இறுதித்தூதராக அனுப்பினான்

அவ்வேளை இந்தப்பூமிக்கு மேல் இணைவைக்காது அல்லாஹ்வை வணங்குவோரில் வேதங்கொடுக்கப்பட்டவர்களில் எஞ்சிய சிலரைத் தவிர அல்லாஹ்வை தூய முறையில் வணங்குவோரில் எவரும் இருக்கவில்லை

இதற்கு முன்னிருந்த நபிமார்களான நபி நூஹ் இப்ராஹீம் மூஸா ஸுலைமான் தாவூத் ஈஸா போன்றோர் அழைத்த எல்லா விடயங்களின் பாலும் அழைப்பவர்களாக இருந்தார்கள் அதாவது உண்மை இரட்சகன் அல்லாஹ ஆவான் அவன் படைப்பாளன் வாழ்க்கை வசதிகளை வழங்குபவன் உயிர்கொடுப்பவன் மரணிக்கச்செய்பவன் அதிகாரமனைத்திற்கும் சொந்தக்காரன் இப்பிரபஞ்ச விதிகளை திட்டமிடுபவன் அளவற்றஅருளாளன் கருணையாளன் என்றும் இப்பிரபஞ்சத்தில் எமது கண்களுக்குப் புலப்பபடக் கூடியவற்றையும் புலப்படாத அனைத்தையும அவன்தான் படைத்தவன் என்றும் அல்லாஹ்வைத் தவிரவுள்ள அனைத்தும் அவனின் படைப்புகள் என்றும் ஈமான் கொள்வது அவர்களின் பிரச்சாரத்தின் அடிப்படையாக இருந்தது

அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் என்றும் அவன் தவிர்ந்த அனைத்தையும் வணங்குவதை கைவிடவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது போன்று அல்லாஹ் ஒருவன் வணக்க வழிபாட்டிலும் ஆட்சி அதிகாரத்திலும் படைத்தலிலும் திட்டமிட்டு நிர்வகிப்பதிலும் அவனுக்கு இணையாக எவறும் கிடையாது என்பதை மிகவும் தெளிவாக விளக்கினார்கள். மேலும் அல்லாஹ் எவரையும் பெறவுமில்லை அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை, அவனுக்கு ஒப்பாகவும் நிகராகவும் எதுவுமில்லை என்பதையும், அவன் அவனின் படைப்புகள் எதிலும் சங்கமிப்பதோ பிரதிபலிப்பதோ கிடையாது என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

மேலும் அவர்கள் நபிமார்களான இப்ராஹீம் மூஸாவிற்கு வழங்ப்பட்ட ஸுஹுபுகள் மற்றும் தவ்வராத், ஸபூர், இன்ஜீல் போன்ற இறைவேதங்களை ஈமான் கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்கள். அதே போல் எல்லா நபிமார்களையும் ஈமான் கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததுடன், அவர்களில் ஒரு நபியையாயினும் பொய்ப்பித்தால் அனைத்து நபிமார்களையும் நிராகரித்தவராவார் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மேலும் அவர்கள் அல்லாஹ்வின் அருள் அனைத்து மக்களுக்கும் உண்டு என்று நன்மாராயம் கூறியதோடு அல்லாஹ்வே இவ்வுலகில் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்குவதாக பொறுப்பேற்றுள்ளான் என்றும் அவனே நிகரற்ற அன்புடைய இரட்சகன் என்றும் புதை குழிகளிலிருந்து மனிதர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் அந்தாளில் அவன் மாத்திரமே விசாரணை நடத்துபவன் என்றும் குறிப்பிட்டார்கள்மேலும் முஃமின்கள் செய்யும் நற்கருமங்களுக்கு பத்து மடங்கு நன்மையையும் தீமையாயின் அதே போன்ற ஒரு தீமையையும் வழங்குவதோடு மறுமையில் இன்பம் நிறைந்த தங்குமிடம் உள்ளது என்றும் யார் அவனை நிராகரித்து தீமையான காரியங்களை புரிகிறார்களோ அவர்களுக்குரிய கூலியை இம்மையிலும் மறுமையிலும் பெற்றுக் கொள்வர் என்றும் அவர்கள் கூறினார்கள்

இறைத்தூதர் முஹம்மத் அவர்களின் தூதில் அவருடைய கோத்திரத்திற்கோ அவர் வாழ்ந்த நகரத்திற்கோ அவருடைய புனித ஆன்மாவுக்கோ உயர் மதிப்பளிக்கப்படவில்லை. மாறாக அல் குர்ஆனில் நபிமார்களான நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா அலைஹிமுஸ்ஸலாம் போன்றோரின் பெயர்கள் நபியவர்களின் பெயரை விட அதிக தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் தாயாரின் பெயரோ, மனைவிமார்களின் பெயர்களோ குறிப்பிடப்படவில்லை. மாறாக மூஸா (அலை) அவர்களின் தாயாரின் பெயர் பல தடவைகள் இடம் பெறுவதோடு மர்யம் அலை அவர்களின் பெயரானது 35 தடவைகள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஷரீஆவுக்கும் பகுத்தறிவிற்கும் இயல்புக்கும் முரண்படுகின்ற அனைத்து விடயங்களிருந்தும், சீரிய நற்குணம் நிராகரிக்கின்ற எல்லா விடயங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர்களாவார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் கட்டளைகளை அவனது அடியார்களுக்கு எத்திவைப்பதற்கு பொறுப்புச்சாட்டப்பட்டவர்கள் என்ற வகையிலும், அவர்கள் எத்திவைக்கக்கூடியவை அல்லாஹ்வின் சார்பாக இருப்பதினாலும் அவர்கள் பாதுகாக்கப்பட்டவர்களாக உள்ளனர். நபிமார்களைப் பொறுத்த வரை ருபூபிய்யா, உலூஹிய்யா எனும் அல்லாஹ்விற்கு மாத்திரம் உரித்தான விடயங்களில் அவர்களுக்கும் எந்த உரிமையும் கிடையாது மாறாக அவர்களும் ஏனைய மனிதர்களைப்போன்றவர்களே. அல்லாஹ் அவர்களுக்கு தூதை வழங்கியதன் காரணமாக அவர்களுக்கு வஹியை அறிவிக்கிறான்.

நபிமார்களை அல்லாஹ் அவர்களின் நுபுவ்வத்தை காட்டவல்ல அற்புதங்களின் மூலம் அவர்களை உறுதிப்படுத்துகிறான். மேலும் அவர்களின் தூதுத்துவத்திற்கு சான்றாக அமையக் கூடிய ஆதாரங்களை வழங்குகிறான். மனிதர்கள் ஈமான் கொள்வதற்கு போதுமான அத்தாட்சிகளை ஒவ்வொரு நபிக்கும் வழங்கினான். அவ்வாறு வழங்கப்பட்ட அத்தாட்சிகளிள் எமது நபி முஹம்மத் ஸல் அவர்களுக்கு வழங்கப்பட்ட திருவசனங்கள் மிகவும் உன்னதமான அத்தாட்சியாக உள்ளது. அந்த வகையில் அல்லாஹ் அவர்களுக்கு அல் குர்ஆனை வழங்கினான். அது நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அத்தாட்சிகளுள் மறுமை நாள் வரையில் நிலைக்கக் கூடியதாக உள்ளது. அதே போன்று மிகப்பெரும் அற்புதங்களின் மூலமும் அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்தினான். இறைத்தூதர் முஹம்மத் அவர்களின் அற்புதங்கள் அதிகமாக உள்ளன. அவற்றின் சிலது பின்வருமாறு:

 

நபியவர்களின் நுபுவத்தின் அத்தாட்சிகளும், அடையாளங்களும். சான்றுகளும்

நபிமார்களை அல்லாஹ் அவர்களின் நுபுவ்வத்தை காட்டவல்ல அறபுதங்களின் மூலம் அவர்களை உறுதிப்படுத்துகிறான். மேலும் அவர்களின் தூதுத்துவத்திற்கு சான்றாக அமையக் கூடிய ஆதாரங்களை வழங்குகிறான். மனிதர்கள் ஈமான் கொள்வதற்கு போதுமான அத்தாட்சிகளை ஒவ்வொரு நபிக்கும் வழங்கினான். அவ்வாறு வழங்கப்பட்ட அத்தாட்சிகளிள் எமது நபி முஹம்மத் ஸல் அவரகளுக்கு வழங்கப்பட்ட திருவசனங்கள் மிகவும் உன்னதமான அத்தாட்சியாக உள்ளது. அந்த வகையில் அல்லாஹ் அவர்களுக்கு அல் குர்ஆனை வழங்கினான். அது நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அத்தாட்சிகளுள் மறுமை நாள் வரையில் நிலைக்கக் கூடியதாக உள்ளது. அதே போன்று மிகப்பெரும் அற்புதங்களின் மூலமும் அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்தினான். இறைத்தூதர் முஹம்மத் அவர்களின் அற்புதங்கள் அதிகமாக உள்ளன. அவற்றின் சிலது பின்வருமாறு

இஸ்ரா மிஃராஜ் பயணம், சந்திரன் பிளந்தமை, கடுமையான வரட்சி ஏற்பட்ட போது மக்களுக்கு நீர் கிடைப்பதற்கு தனது இரட்சகனிடம் பிரார்தித்த போது பல தடவை மழை பொழிந்தமை.

குறைவான உணவையும் நீரையும் அதிகரிக்கச்செய்தமை, அதன் மூலமாக அதிகமான மக்கள் உண்டு பருகியமை.

எவரும் விரிவாக அறியாத சென்ற கால நிகழ்வுகள் குறித்து அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததை அறிவித்தமை, உதாரணமாக முன்னைய நபிமார்கள் தமது சமூகத்தவர்களுடன் நடந்து கொண்ட சம்பவங்கள் மற்றும் குகை வாசிகளின் சம்பவம் போன்றவை.

அதே போன்று எதிர்காலத்தில் அவர்களுக்குப் பின்னர் நடக்கவுள்ள விடயங்களை அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக்கொடுத்ததை அறிவித்தமை. அவற்றுள் ஹிஜாஸிலிருந்து வெளிப்படக்கூடிய பாரிய நெருப்பு இதனை சிரியா நாட்டவர்களும் பார்த்தார்கள். பெரும் கட்டிடங்களைக் கட்டுவதில் மக்கள் போட்டிபோட்டுக்கொள்கின்றமை.

மக்களிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்யவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.

(ரோம் பாரசிக சாம்ராஜ்யங்கள் வெற்றிகொள்ளப்பட்டு அவற்றின் பொக்கிஷங்கள் இறைவழியில் செலவுசெய்யப்படும் என்று) தமது தோழர்களுக்கு கூறிய அவர்களின் வாக்குறுதி நிறைவேறியமை.

(لَتُفْتَحَنَّ عَلَيْكُمْ فَارِسُ وَالرُّومُ، وَلَتُنْفَقَنَّ كُنُوزَهُمَا فِي سَبِيلِ اللَّهِ).

"ரோம் பாரசிக சாம்ராஜ்யங்கள் வெற்றிகொள்ளப்பட்டு அவற்றின் பொக்கிஷங்கள் இறைவழியில் செலவுசெய்யப்படும் "

மலக்குகள் மூலம் அவர்களை அல்லாஹ் பலப்படுத்தியமை.

நபிமார்கள் தமது சமூதாயத்தினருக்கு நபி முஹம்மத் ஸல் அவர்களின் நுபுவ்வத் குறித்து நற்செய்தி கூறியமை. இவ்வாறு நற்செய்தி கூறியோரில் இஸ்ராஈலின் பரம்பரையில் வந்த நபிமார்களான மூஸா, தாவூத், ஸுலைமான், ஈஸா போன்றோர் முக்கியமானோர் ஆவர்.

பகுத்தறிவு ரீதியான ஆதாரங்கள்; மற்றும் எடுத்துக்காட்டுக்கள் உதாரணங்கள் மூலமாக சீரிய பகுத்தறிவுபடைத்தோறும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அத்தாட்சிக்கு அடிபணிந்தமை.3

இவ்வத்தாட்சிகளும் (அற்புதங்களும்) ஆதாரங்களும் மற்றும் பகுத்தறிவுரீதியிலான உதாரணங்களும் அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் பரவிக்கிடக்கிறது. அவ்வத்தாட்சிகள் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதளவிற்கு மிக அதிகமாவே உள்ளன. யாராவது ஒருவர் இது குறித்து அறிய விரும்பினால் அவர் அல் குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் நபியவர்களின் வாழ்வியலையும் மீட்டிப்பார்க்கட்டும். அவற்றில் இவ்வத்தாட்சிகள் குறித்த உறுதியான செய்தி உண்டு.

இப்பிரமாண்டமான அற்புதங்கள் நிகழாமல் இருந்திருப்பின் அறபுத்தீபகற்பத்தில் வாழ்ந்த குறைஷிக் காபிர்களும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களை பொய்ப்பிப்பதற்கும் மக்களை அவர்களை அணுகாது எச்சரிப்பதற்குமான வாய்ப்பை அடைந்திருப்பார்கள் என்பதுவே உண்மை விடயமாகும்

அல்குர்ஆன் இறைத்தூதர் முஹம்மத் ஸல் அவர்களுக்கு வஹியாக அல்லாஹ்வினால் அறிவிக்கப்பட்ட வேத நூலாகும். அனைத்துலக இரட்சகனின் வார்த்தையாகும். மனித ஜின் இனங்களுக்கு இக்குர்ஆனைப் போன்ற ஒன்றை அல்லது இதில் இருக்கும் ஸுறாவைப்போன்ற ஒன்றை கொண்டுவருமாறு அல்லாஹ் சவால் விடுத்துள்ளான். குறிப்பிட்ட இச்சவாலானது இன்றுவரை முறியடிக்கப்படாது தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கிறது. மேலும் அல்குர்ஆன் பல மில்லியன் மக்கள் விடை தெரியாது தட்டு;த்தடுமாறிக்கொண்டிக்கும் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது. மேலும் இக்குர்ஆன் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்பட்ட நிலையில் அது இறங்கிய மொழியில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அது மகத்துவமும் அற்புதமும் நிறைந்த ஒரு மிகப்பெரும் வேதநூலாகும். மனிதர்களுக்கு கிடைத்த வேத நூல்களில் மிகவும் உயர்ந்ததும் மகத்துவமிக்கதுமாகும். மொழிதெரிந்தோர் அதனை நேரடியாக வாசிப்பதற்கும் தெரியாதோர் அதன் கருத்து மொழியாக்கத்தை வாசிப்பதற்குமான ஒர் அரிய நூலாக விளங்குகிறது. இதனை கற்று ஈமான் கொள்வதற்கான வாய்ப்பை இழந்தவர் அனைத்துப்பாக்கியங்களையும் இழந்தவராவார்.

அதே போன்று இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)அவர்களின் (ஸுன்னா) வழிமுறையும், நேர்வழிகாட்டலும், வாழ்வியலும் நம்பகமான அறிவிப்பாளர்கள் தொடர் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் எங்களுடன் வாழுவது போன்று அவர்கள் பேசிய மொழியிலேயே அச்சிடப்பட்டும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்ட்டும் உள்ளன. அல்குர்ஆனும் நபி வழிமுறையும்தான் இஸ்லாமிய தீர்ப்புகளுக்கும் மார்க்க சட்டதிட்டங்களுக்கும் இரு அடிப்படைகளாக உள்ளன.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) கொணடு வந்த ஷரிஆ (மார்க்க சட்டதிட்டங்கள்

இறைத்தூதர் ஸல் அவர்கள் கொண்டு வந்த மார்க்க சட்டதிட்டமானது இஸ்லாமிய சட்டதிட்டங்களாகும். அது அல்லாஹ்வின் இறுதி மார்க்க சட்டதிட்டங்களாகவும் இறைவினின் இறுதித்ததூதாகவும் உள்ளது மேலும் முன்னய நபிமார்களின் சட்டதிட்ங்களுடன் அதன் முறைகள் வித்தியாசப்படினும் அவைகளின் அடிப்படைகளிளே ஒத்துப்போவதாகவும் அமைந்துள்ளது.

இஸ்லாமிய ஷரீஆ எல்லாக் காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்தக்கூடிய விடயங்களையும், மனிதர்களின் மார்க்கம் இவ்வுலக நலன்கள் அடங்கிய முழுமையான சட்டதிட்டமாகும். அதாவது அடியார்கள் கட்டாயம் செய்ய வேண்டிய வணக்கங்களான தொழுகை, ஸகாத் போன்றவிடயங்களையும் உள்ளடக்கியுள்ளதுடன். நிதி, பொருளாதார, சமூக, அரசியல், போர், சுற்றுச் சூழல் தொடர்பான விடயங்களில் அனுமதிக்கப்பட்டதும் தடைசெய்யப்பட்டதுமான நடவடிக்கைகளையும் அவை அல்லாத மனிதர்களின் இம்மை மறுமை வாழ்வுக்குத் தேவையான விடயங்களையும் தெளிவுபடுத்துகிறது.

மேலும் இந்த ஷரீஆவானது மனிதர்களின் கொள்கைகளையும் உயிர்களையும் மானங்களையும் புத்தியையும்(அறிவாற்றளையும்)சந்ததிகளையும் பாதுகாக்கிறது .அது மாத்திரமின்றி நேர்மை ஒழுக்கம் போன்ற உயர் விழுமியங்களை உள்ளடக்கியிருப்பதுடன் அனைத்து தீயசெயல்கள் ஒழுக்கச்;சீர்கேடுகள் தீமைகளை விட்டும் எச்சரிக்கிறது. அத்துடன் மனித நேயம், நடு நிலை பேணுதல், நீதி, உளத்தூய்மை, சுத்தம், திறன்படசெயலாற்றல், அன்பு, மனித நலன் நாடல், மனித உயிர்காத்தல், தாய்நாட்டின் அமைதி காத்தல் போன்ற நலன்களை ஊக்குவித்து எவ்வித நியாயமான காரணங்களுமின்றி மக்களை அச்சுருத்துதல், பயமுறுத்துதல் போன்றவற்றவை வன்மையாக தடை செய்கிறது. இறைத்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் அனைத்து வகையான அத்துமீரல்கள், வன்முறைகள், ஊழல்கள் போன்றவற்றிற்கும் மூட நம்பிக்கை, துறவரம், ஒதுங்கி வாழ்தல் போன்றவற்றிகும் எதிரானவராக இருந்தார்கள்.

மனித குலத்தை (ஆண்களாயினும் பெண்களாயினும் ) அல்லாஹ் கண்ணியப்படுத்தி அவர்களுக்குரிய முழு உரிமைகளையும் பொறுப்பேற்பேற்றுள்ளான் என்றும், அவனை (மனிதனை) அவனின் ஏனைய அனைத்து தெரிவுகளுக்கும், செயற்பாடுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாளனாக ஆக்கியுள்ளான் என்பதையும், எந்த ஒரு செயற்பாட்டின் மூலம் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைத்தால் அதற்குரிய பொறுப்பை அவனே சுமக்க வேண்டும் என்பதையும், ஆண் பெண் ஆகியோர் இறைவிசுவாசத்திலும் பொறுப்பிலும் கூலிபெறுவதிலும் சரிசமமானவர்களாக அல்லாஹ் வைத்துள்ளான் என்பதையும் இறைத்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.குறிப்பாக இஸ்லாமிய ஷரீஆவில் பெண் குறித்த பிரத்தியேக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அவளை இஸ்லாம் ஒரு தாயாக மனைவியாக மகளாக சகோதரியாகப் பார்க்கிறது

இறைத்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் கொண்டுவந்த இந்த ஷரீஆ பகுத்தறிவை (புத்தியை) பாதுகாத்து அதனை நாசமாக்கக்கூடிய மது அருந்துதல் போன்ற விடயங்களை தவிர்ந்து நடக்குமாறு எடுத்தியம்புகிறது. இஸ்லாத்தைப்பொறுத்தவரை மனிதன் அறிவோடும் தெளிவோடும் தனது இரட்சகனை வணங்குவதற்கு சரியான பாதையைகாட்டும் பகுத்தறிவிற்கு ஒரு ஒளியாகவே இஸ்லாம் மார்க்கத்தை குறிப்பிடுகிறது. அத்துடன் இஸ்லாமிய ஷரீஆ அனைத்து பொறுப்புக்களும் கடமைகளும் பகுத்தறிவைமையமாகக் கொண்டுதான் அமைந்திருக்க வேண்டும் என்று விதித்துள்ளதால், பகுத்தறிவிற்கு மிகப்பெரும் இடத்தை வழங்கியுள்ளதுடன் மூட நம்பிக்கை, விக்கிரக ஆராதனைகளில் சிக்கிதவிப்பதிலிருந்து அதனை விடுவித்துள்ளது.

இஸ்லாமிய ஷரீஆ உண்மையான அறிவை போற்றுவதுடன் மனோ இச்சையிலிருந்து விடுபட்ட பக்கசார்பாற்ற தூய்மையான அறிவியல் ஆய்விற்கு தூண்டுகிறது. மேலும்தன்னைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் சிந்தித்து உண்மையை அறிவது நபியவர்கள் கொண்டுவந்த இம்மார்க்கத்திற்கு முரண்படாத உண்மை அறிவியல் ஆய்வு முடிவுகள் குறித்து சிந்திக்கவும் அவதானம் செலுத்தவும் ஊக்குவிக்கிறது

இஸ்லாமிய ஷரீஆவில் ஓரு குறிப்பிட்ட இனத்திற்கு ஏனைய இனத்தை விட தனித்சிறப்போ ஒரு சமூகத்தை விட இன்னொரு சமூகத்திற்கு எவ்வித உயர்வோ கிடையாது அனைவரும் அதன் சட்டங்களுக்கு முன் சமமானவர்கள் ஏனெனில் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் ஒரு இனம் மற்றைய இனத்தைவிடவோ ஒரு சமூகம் ஏனைய சமூகத்தாரை விடவோ சிறப்புப்பெறுவது என்பது இறையச்சத்தின் மூலமாகவே அமையும்.தூதர் முஹம்மது(ஸல்) அவரகள் "ஒவ்வொரு குழந்தையும் ஃபித்ராவின் படி(துாய்மையாக) பிறக்கிறது என்றும், எந்த மனிதனும் பாவம்செய்தவனாக பிறப்பதுமில்லை அல்லது மற்றவர்களின் பாவத்தை சுமந்தவனாக பிறப்பதுமில்லை" என்றும் கூறினார்.

இஸ்லாமிய ஷரீஆவில் அல்லாஹ் தவ்பாவை விதியாக்கியுள்ளான். தவ்பா என்பது ஒரு மனிதன் தனது தவறை முழுமையாக விட்டுவிட்டு அல்லாவின் பால் மீழுதல் என்பது பொருளாகும். இஸ்லாத்தை ஒருவர் புதிதாக ஏற்பதினால் அவரின் முன்னைய பாவங்களை இஸ்லாம் முழுமையாக நீக்கவிடுகிறது. அதே போல் தவ்பாவும் ஒருவரின் பாவங்களை அழித்து விடுகிறது. எனவே ஒரு மனிதன் தனது தவறுகளை பிறமனிதர்களுக்கு முன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவைகிடையாது. காரணம் இஸ்லாத்தில் கடவுள் மனிதன் உறவு நேரடியானது, இதனால் உனக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் தரகராக இருப்பதற்கு எவறும் தேவையில்லை. எனவேதான் இஸ்லாம் மனிதர்களை கடவுள்களாக வைத்துக்கொள்வதையோ ,அல்லாஹ்வின் ருபூபிய்யத் எனும் செயற்பாட்டிலும், உலூஹிய்யத் எனும் கடவுள் கோட்பாட்டிலும் அவனுக்கு இணையாக எதுவும் இருப்பதை தடைசெய்கிறது.

நபியவர்கள் கொண்டுவந்த ஷரீஆ முன்னய ஷரீஆக்கள் அனைத்தையும் மாற்றிவிட்டது. காரணம் யாதெனில் நபியவர்கள் கொண்டுவந்த ஷரீஆ மறுமைநாள் வரையில் நிலைத்திருக்கும் இறுதி ஷரீஆவாகவும் உலகமக்கள் அவைருக்குமான தனியான ஷரீஆவாக இருப்பதினாலுமாகும். இதனால்தான் முன்னைய ஷரீஆக்கள் சிலது சிலதை மாற்றியது போல் இஸ்லாமிய ஷரீஆ முன்னர் வந்த அனைத்து ஷரீஆக்களையும் மாற்றிவிட்டது. இறைத்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் கொண்டுவந்த இஸ்லாமிய மார்க்கத்தை தவிர வேறு மார்க்கங்களையோ, இஸ்லாமிய ஷரீஆவைத் தவிர வேறு ஷரீஆக்களையோ அல்லாஹ் அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமிய சட்டங்களை அறிய விரும்புவோர் இஸ்லாம் குறித்த நம்பகமான நூற்களை பார்க்கட்டும்.

இஸ்லாமிய ஷரீஆவின் இலக்கு ஏனைய இறைத்தூதுகளின் இலக்கை போன்றே அமைந்துள்ளது. அதாவது மனிதன் இந்த சத்திய மர்க்கத்தை ஏற்று அவன் அனைத்துலக இரட்சகனான அல்லாவுக்கு அடிபணிந்த ஒரு தூய அடியானாக உயர்ந்து நிற்கவேணடும் என்பதும், மனிதனுக்கும் சடவாதத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் அடிமைப்படுவதிலிருந்து விடுதலைபெறவேண்டும் என்பதுமாகும்.

இஸ்லாமிய ஷரீஆ மனிதனின் உண்மைத் தேவைகளை நன்கறிந்த அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டிருப்பதால் அது எல்லாக் காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொறுத்தமானதாக அமைந்துள்ளதுடன் எப்போதும் மனிதனின் உண்மையான நலன்களுடன் முரண்படுகின்ற விடயங்கள் எதுவும் அதில் கிடையாது. மக்களைப்பொறுத்தவரை அவர்களுக்கே உரித்தான ஒரு சீரிய சட்டம் தேவைப்படுகிறது அது மனித குலத்தை சீர்படுத்தக்கூடியதாகவும், ஒன்றோடு ஒன்று முரண்படாததாகவும் மனிதனால் உருவாக்கப்படாததாகவும், அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறான ஒரு சட்டம்தான் மனிதர்களுக்கு நேரான வழியைக்காட்டும். மேலும் அவ்வாறான சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்தால் அவர்களின் விவகாரங்கள் எல்லாம் சீர்பெறுவதுதோடு சிலர் சிலருக்கு அநியாயம் இழைப்பதிலிருந்து பாதுகாப்புப் பெறுவார்கள்.

அவர்கள் குறித்த எதிரியின் நிலைப்பாடு அவர்களுக்கான சிறந்த சாட்சியமாகும்.

எல்லா நபிமார்களுக்கும் தங்களை எதிர்க்கக் கூடிய பகைவர்கள் இருந்துள்ளனர் என்பதில் எவ்விதச்சந்தேகமும் கிடையாது. அவர்களின் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டையாகவும் இருந்துள்ளனர். மக்கள் அல்லாஹ்வை விசுவாசிப்பதை தடுக்க்கூடியவர்களாகவும் எதிரிகள் இருந்துள்ளனர். இறைத்தூதர் முஹம்மத் ஸல் அவர்களைப்பொறுத்தவரை அவர்கள் உயிரோடு இருக்கும் போதும், அவர்கள் மரணித்த பின்னரும் அதிகமான எதிரிகள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எதிராக அல்லாஹ் அவர்களுக்கு உதவிசெய்து வெற்றியைக் கொடுத்தான். முன்னைய காலத்தில் வாழ்ந்த மற்றும் நவீனகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எதிரிகளில் அதிமானோர் அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்றும், அவர்கள் முன்னைய தீர்க்கதரிசிகள் கொண்டுவந்த மார்க்கத்தையே கொண்டுவந்தார்கள் என்றும் தமது சாட்சியங்ளை பதிவு செய்துள்ளடதுடன், அவர்கள் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் அறிந்து வைத்துள்ளார்கள். என்றாலும் அவர்கள் இம்மார்க்கத்தை ஏற்காமல் இருப்பதற்கு அவர்களுக்கு தடையாக இருக்கின்ற விடயங்கள் அதிகமாக உள்ளன. அவற்றுள் தலைமைத்துவப் பற்று, மற்றும் தம்சமூகத்திற்கு பயப்படுகின்றமை, மேலும் தங்கள் பட்டம் பதவிகளின் மூலம்கிடைக்கப்பெறும் சொத்துச் செல்வம் பரிபோய்விடும் என்ற அச்சம் போன்றவை முக்கிய விடயங்களாகும்.

புகழ் அனைத்தும் உலகத்தாரின் இறைவனான அல்லாஹ்வுக்கு உரித்தானது.

 

 

 

***

பொருளடக்கம்

 

மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதீனாப் பள்ளிவாயிலின் மார்க்க விவகாரங்களின் தலைமையகத்தில் உள்ள கல்விக் குழு 2

1-அவரின் பெயர்,பரம்பரை, பிறந்து வளர்ந்த நகர் 2

ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணுடன் நபியின் மங்கலத் திருமனம் 4

வஹியின் துவக்கம் 5

4-அவர்களின் தூதுத்துவம் 16

நபியவர்களின் நுபுவத்தின் அத்தாட்சிகளும், அடையாளங்களும். சான்றுகளும் 20

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) கொணடு வந்த ஷரிஆ (மார்க்க சட்டதிட்டங்கள் 24

அவர்கள் குறித்த எதிரியின் நிலைப்பாடு அவர்களுக்கான சிறந்த சாட்சியமாகும். 30

 

 

***

 


ஸஹீஹ் அல்புஹாரீ (4461) 6/15.

அவ்வாறு அடிபடிணிந்த அத்தாட்சிகளின் ஒன்றுதான் பின்வரும் அல்குர்ஆன் வசனம் கூறும் விடயம்"மனிதர்களே ஓர் உதாரணம் கூறப்படுகிறது எனவே அதற்கு நீங்கள் செவியசாயுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைத்துக் கொண்டிருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களால் ஒரு கொசுவைக் கூடப் படைக்க முடியாது.கொசு அவர்களிடமிருந்து எதையேனும் பரித்துக்கொண்டால் அதை அதனிடமிருந்து மீளவும் பெற்றுக்கொள்ளவும் அவர்களால் முடியாது.உதவி தேடுபவனும் தேடப்படுபவனும் பலவீனம் அடைந்து விட்டனர்" (அல் ஹஜ்: 73)

ஸஹீஹ் முஸ்லிம் (901)